Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாதிரி வாக்குகள் அழிக்கப்படாததால் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

மே 09, 2019 08:57

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.13 இடங்களில் மறுவாக்குப்பதிவுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன ."EVM மற்றும் VVPAT"-ல் பதிவான மாதிரி வாக்குகள் அழிக்கப்படாததால் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மறு வாக்குப்பதிவுக்காகவே தேனிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன 

13 வாக்குச்சாவடிகள் தவிர வேறு எங்கும் மறுவாக்குப்பதிவு நடைபெறாது.

46 இடங்களில் 13ல் மட்டுமே தற்போது மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு வந்துள்ளது. 46 இடங்களில் 13ஐ தவிர பிற இடங்களுக்கு மறுவாக்குப்பதிவு நடக்க தற்போது வாய்ப்பில்லை 

ஈரோடு, ஆண்டிப்பட்டி வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை நீக்காமல் வாக்குப்பதிவு நடைபெற்றதால் தற்போது மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது என கூறினா

தலைப்புச்செய்திகள்